Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வியாசேஸ்வரருக்கு அபிஷேகம்! அங்காள பரமேஸ்வரி கோவிலில் நவக்கிரக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 நவ
2014
12:11

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று, அன்னாபிஷேகம் நடந்தது.   கும்மிடிப்பூண்டி, எஸ்.பி., முனுசாமி நகரில் உள்ள வில்வநாதீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை  அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.  வில்வநாதீஸ்வரர் மட்டுமின்றி, சித்தி விநாயருக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. கவரைப்பேட்டை அருகே, அரியத்துறை கிராமத்தில் உள்ள  வரமூர்த்தீஸ்வரர் மற்றும் பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவில்களில், நேற்று மாலை, அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர்: திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத  தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர், சிவா – விஷ்ணு கோவில், பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரர் ÷ காவில் ஆகிய சிவன் கோவில்களில், நேற்று மாலை, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், சிவபெருமானுக்கு, அன்னத்தால்  அலங்காரம் செய்யப்பட்டு பின், அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவா யநம என்ற மந்திரத்தை கூறி, சிவனை வழிபட்டனர்.

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள காமாட்சி அம்பாள் உடனுறை சோளீஸ்வரர் கோவிலில், நேற்று அன்னாபிஷேகம்  நடந்தது. இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு, சோளீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில்,  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் உள்ள தங்காதலி அம்மன்  உடனாய வாசீஸ்வரர் கோவில், வாசீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், தங்காதலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

அதன்பின்,  இரவு 7:30 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் முக்கிய கோவில்களான வழக்கறுத்தீஸ்வரர், திருக்காலிமேடு சத்திய நாதசுவாமி, மேட்டுத்தெரு நகரீஸ்வரர், காசி விஸ்வநாதர், தீர்த்தேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது. அதன் பின்,  மூலவருக்கு சாத்தப்பட்ட அன்னத்தை தயிர் சாதமாகவும், சாம்பார் சாதமாகவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar