விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம் நடந்தது. விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர்., நகரில் உள்ள ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில் வனபோஜன வைபவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு ராகவேந்திரர் சுவாமிக்கு சங்கல்பம், புன்யாவசனம், வாஸ்து மண்டல பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு மரத்திற்கு வஸ்த்ரம், கந்த புஷ்ப அலங்காரம், ஹோமம், மரத்தை சுற்றி பலி தானம், 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.