மருதமலை கோயில் மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய ஐந்து மரங்கள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து பஞ்சவிருட்சமாக காட்சி தருகிறது. பழமையான இம்மரத்தடியில் விநாயகர், முருகன் அருள்கின்றனர். பல முனிவர்கள் இங்கு வாசம் செய்ததாக ஐதிகம்.