பதிவு செய்த நாள்
13
நவ
2014
12:11
மதுரை : சபரிமலையில் மண்டல, மகர விளக்கு உற்சவ அன்னதானத்தை முன்னிட்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சங்க தமிழக அமைப்பு மாநில தலைவர்விஸ்வ நாதன், செயலாளர் ஐயப்பன் கூறியதாவது: சன்னிதானம் முதல் பல்வேறு இடங்களில் அமையவுள்ள முகாம்களில் பக்தர்களுக்கு குடிநீர், இலவச மருத்துவம், ஸ்ரெட்ச்சர் சேவை, ஆக்ஸிஜன் பார்லர்களில் பணியாற்றுவது, துாய்மை பணி மேற்கொள்ள சேவா சங்க உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். மதுரை எல்லீஸ்நகர் மற்றும் சென்னை, வேலுார் மாவட்டத்தில் நான்கு இடங்கள், திருச்சி, கன்னியாகுமரி, தேனி - வீரபாண்டி ஆகிய இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் அன்னதானம், குடிநீர் வழங்கி வழிகாட்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவர். துப்புரவு பணிகள் மேற்கொள்ள துப்புரவு பணியாளர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.