பதிவு செய்த நாள்
19
நவ
2014
12:11
செஞ்சி: சிறுகடம்பூர் சிவசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் 27ம் தேதி நடக்கிறது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள சிவசக்தி விநாயகர், பாலமுருகன், சீனிவாசப்பெருமாள், தாயார் கோவில் மகா கும்பாபிஷேகம் 27ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 25ம் தேதி காலை 8.30 மணிக்கு அனுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது.பகல் 11 மணிக்கு சாமி கரிக்கோல ஊர்வலம், 11.30 மணிக்கு பிரதிஷ்டை, 12 மணிக்கு கண் திறத்தல், மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 26ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள், 27ம் தேதி நான்காம் கால யாக பூஜை, 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 8.15 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும் 8.30 மணிக்கு கோபுர மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8.45 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகி மணிவண்ணன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.