பாகம்பிரியாள் கோயில் உண்டியல் திறப்பு; ரூ.15 லட்சம் வருமானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2014 12:11
திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு உண்டியல் மூலம் ரூ.15 லட்சம் வருமானம் கிடைத்தது. திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் 8 உண்டியல்கள் உள்ளது. இவைகள் நேற்று கோயில் அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.11 லட்சத்து 92 ஆயிரத்து 518 ரொக்கம், தங்கம் 142 கிராம், வெள்ளி ஒரு கிலோ 165 கிராம் இருந்தது. மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் என, கணக்கிடப்பட்டது. இந்து அறநிலைய துறை உதவி ஆனையர் ரோசாலிசுமதா, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் உடனிருந்தனர்.