திருக்காமீஸ்வரர் கோவிலில் 19ம் ஆண்டு லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2014 11:11
புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை விழா இன்று துவங்குகிறது. வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், அய்யப்ப சுவாமிக்கு 36ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மற்றும் 14ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா, இன்று 24ம் தேதி காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, வரும் 19ம் தேதி வரை, லட்சார்ச்சனை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு 7.00 மணிக்கு லட்சார்ச்சனை, 9.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. டிச.20ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடக்கிறது. விளக்கு பூஜைக்கான பொருட்களை கோவில் நிர்வாகம் வழங்கும். அன்று மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. விழா ஏற்பாடுகளை அய்யப்ப பக்தர்கள் செய்துள்ளனர்.