திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2014 01:12
கற்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது. பெண்களிடம் மட்டும் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர். திருமணத்தில் இணையும் மணமகனும், மணமகளும் கற்பு நெறி தவறாமல் வாழ்வோம் என உறுதி மொழி ஏற்பதே அம்மி மிதிக்கும் சடங்காகும். அருந்ததி, வசிஷ்டர் இருவரும் கற்பு நெறி தவறாமல் வாழ்ந்தவர்கள். வானில் ஒளிவீசும் நட்சத்திரமாக இருக்கும் அருந்ததியை வணங்கி ஆசி பெறுவதற்காகவும் இது செய்யப்படுகிறது.