இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ‘கோபத்தை’ நம்மால் கட்டுப்படுத்த முடியுமா... இப்படித்தான் இயேசு ஒருமுறை சீடர்களுடன் கப்பலில் பயணித்தார். அப்போது கடலில் கொந்தளிப்பு அதிகமானது. அப்போது கடலை பார்த்து ‘உஷ்... அமைதியாக இரு’ என்றார். அதன் பிறகு கொந்தளிப்பு அடங்கியது. அன்பு, மனத்துாய்மை கொண்டவருக்கு இயற்கையும் கட்டுப்படும். இதுவே இதன் ரகசியம்.