பதிவு செய்த நாள்
11
டிச
2014
11:12
விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டி, விநா யகர் சன்னதியில் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதேபோல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநா யகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே காலனி விநாயகர், கடலூர் சாலை விஜய விநாயகர், பெரியார் நகர் வினை தீர்த்த விநாயகர், செல்வ விநாயகர் கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.