சபரிமலை: சபரிமலையில் நேற்று மீண்டும் மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீர் என்று அரை மணி நேம் மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் நல்ல வெயில் அடித்தது, இரவில் குளிரும் இல்லை. நேற்று மதியம் வரை நல்ல வெயில் அடித்தது. மதியத்துக்கு பின்னர் வானம் கறுத்து மூன்று மணி வாக்கில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பக்தர்கள் மலையேறுவதிலும், தங்குவதிலும் சிரமப்படுகின்றனர்.