பக்தர்கள் பாதுகாப்புக்காக டிராக்டர் வேகம் குறைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2014 01:12
சபரிமலை:பக்தர்களின் பாதுகாப்பை கருதி சபரிமலை பாதையில் டிராக்டர்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பொருட்கள் தலை சுமடாகவும், கழுதை மீதும் ஏற்றி செல்லப்பட்டு வந்தது. கழுதைகளால் பக்தர்களுக்கு சிரமமும், கழுதை சாணத்தால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் போடப்பட்டது. கான்கிரீட் போடுவதற்கு முன்னால் ஒரு நாளில் ஒரு டிராக்டர் ஐந்து முறை சன்னிதானம் வந்து சென்றால் இப்போது 15 முறை வந்து செல்கிறது. பொருட்கள் தடையின்றி வருவதால், கழுதைகள் முழுமையாக தடை செய்யப்பட்டது.தற்போது பக்தர்கள் திரும்பி செல்ல சுவாமி ஐயப்பன் ரோட்டில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். டிராக்டர்கள் வேகமாக செல்வதால் பக்தர்கள் செல்வதில் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார்கள் வந்த நிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. இதில் டிராக்டர்களின் வேகத்தை மணிக்கு ஐந்து கிலோ மீட்டராக குறைத்து முடிவு செய்யப்பட்டது. இதை மீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.