பதிவு செய்த நாள்
16
டிச
2014
02:12
ஆத்தூர் : ஆத்தூர், காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஆத்தூர், நரசிங்கபுரம் ஐயப்ப குருசாமிகள் சார்பில், ஐயப்பன் ஸ்வாமிக்கு, சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் நடந்தது.
ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஐயப்பன் ஸ்வாமிக்கு தனிக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம், ஆத்தூர், நரசிங்கபுரம் ஐயப்ப குருசாமிகள் மற்றும் பக்தர்கள் சார்பில், ஐயப்பன் ஸ்வாமிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, ஐயப்பன் ஸ்வாமி சிறப்பு புஷ்ப அலங்காரத்தில், முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் என, பலர் கலந்து கொண்டனர்.