பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. வேதபுரீஸ்வரர், காளத்தீஸ்வரர் கோவில்களில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்றி சனிபகவானை வழிபட்டனர். வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பரிகார யாகமும், தொடர்ந்து கோவிலிலுள்ள நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பேட்டையான்சத்திரம் சிவசடையப்பர் கோவிலில் வேதிகா பூஜை, நவக்கிரக ஹோமம், சனிபகவான் மூல மந்திர ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. திருவாண்டார்கோவில் பஞ்சதீஸ்வரர் கோவில், கோரிமேடு திருநகர் சுந்தரேசர் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில், சாரம் சுப்ரமணிய சுவாமி கோவில், திலசை தளிஞ்சை காளியம்மன் கோவில், நல்லாத்துார் சுவர்ணபுரீஸ்வரர் கோவில், நைனார்மண்டபம் செல்வ விநாயகர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், விவேகானந்தா நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களி லும் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.