உடுமலை : உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சனிபகவானுக்கு சிறப்பு அலங்காரத்தோடு சிறப்பு வழிபாடு நடந்தது. சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நேற்று மதியம் 2.44 மணிக்கு இடம் பெயர்ந்துள்ளார். சனீஸ்வர பகவானுக்கு, கருப்பு வஸ்திரம் அணிவித்து, தீபம் மற்றும் நைவேத்திய ஆராதனை செய்யப்பட்டது. 17 நட்சத்திரங்களுக்கு சனி பரீதி, சங்கல்ப்பபரிகாரம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சனீஸ்வரனுக்கு சிறப்பு யாகபூஜை நடந்தது. சனிப்பெயர்ச்சி வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் கோவில் வளாகத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சனிபகவான் கோவிலில் சனிபெயர்ச்சி விழா நடந்தது. நேற்று மதியம் நடந்த விழாவில் சிறப்பு அபிேஷகங்கள், வழிபாடுகள், கருப்பு வஸ்திரம் சாத்தி துாபதீபம் காட்டி வைவேத்திய ஆராதனைகள் நடந்தன. மாலை 3.00 மணிக்கு கணபதி ஹோமம், பஞ்சகவ்யம், நவகிரகபூஜை, அபிேஷகம் மற்றும் அலங்காரமும் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.