பதிவு செய்த நாள்
27
டிச
2014
12:12
கோவை:கோவையிலுள்ள தேவாலயங்களில்,கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஏசு கிறிஸ்து பிறந்த நாளையொட்டி, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஏசு பிறப்பை சித்தரிக்கும் வகையில், குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன. சர்ச்சுகள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிவெள்ளத்தில் மிதந்தன.கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதலே கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் சர்ச்சுகளில் துவங்கியது. நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் துவங்கி, அதிகாலை வரை நடந்தது. பின், கூட்டு பிரார்த்தனை நடந்தது.கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச், டவுன்ஹாலிலுள்ள புனித மைக்கேல் சர்ச், திருச்சி ரோட்டிலுள்ள கிறிஸ்து நாதர் சர்ச், கோவைப்புதூர் குழந்தை ஏசு சர்ச், புலியகுளம் அந்தோனியர் சர்ச், உப்பிலிபாளையம் இம்மானுவேல் சர்ச், மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஜான்பாஸ்கோ சர்ச் ஆகியவற்றில் நள்ளிரவு முதல் சிறப்பு ஆராதனைகள், திருப்பலி, நற்கருணை ஆசி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
திருச்சி ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பாதிரியார் எபினேசர் மணி, உதவி பாதிரியார் ஜெர்ரி ஆகியோர் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினர். கோவை மைக்கேல் சர்ச்சில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கினார்.