புதுச்சேரி: நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ௧ம் தேதி காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், வரும் ௧ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருப்பாவை சேவை நடக்கிறது. 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 6.00 மணிக்கு, பக்தர்களுக்கு சந்தன பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, சுவாமி அலங்கார வீதியுலா, 11.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.