Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குலத் தொழிலுக்கு மரியாதை செலுத்திய ... பழமையான கோவிலில் புதைந்திருந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி ஆருத்ரா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:12

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஜன., 4ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், 5ம் தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனம்: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபையாகும். ரத்தினசபை என்றழைக்கப்படும் இக்கோவிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2015ம் ஆண்டின் ஆருத்ரா விழா, ஜன., 4ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, அன்று காலை 9:00 மணிக்கு, உற்சவர் சோமாஸ்கந்தர், வண்டார் குழலியம்மன் சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் இருந்து திருவாலங்காடு மற்றும் பழையனூர் பகுதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு, ரத்தின சபாபதி பெருமான் (நடராஜ பெருமான்), ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள, ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் எழுந்தருள்வார். பின், விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் விழா துவங்கி, கதம்ப தூள், நெல்லி பொடி, வில்வ பொடி, சாத்துக்குடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 52 வகையான அபிஷேகங்கள் நடக்க இருக்கின்றன. ஜன., 5ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு, தீபாராதனை, மற்றும் கோபுர தரிசனம் நடைபெறுகிறது.

ஒரு லட்சம் பக்தர்கள்: இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம், சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar