Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடாரண்யேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி ... தீவனூர் கோவிலில் சிறப்பு வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவிலில் புதைந்திருந்த அம்மன், சிலை கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:12

திருவண்ணாமலை: ஆரணி அருகே, உழவாரப்பணியின் போது, கோவிலில் புதைந்திருந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. ஆரணி அடுத்த, காட்டேரி கிராமத்தில், பழமைவாய்ந்த குங்குமநாயகி சமேத அப்புநாதீஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்து முற்றிலும் உடைந்து தரைமட்டமானது. கோவிலில் இருந்த மூலவர், குங்குமநாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சிலையும் மண்ணில் புதைந்தன. காட்டேரி கிராமத்தில், குங்குமநாயகி சமேத அப்புநாதீஸ்வரர் கோவில் மண்ணில் புதைந்து வழிபாடு இல்லாமல் உள்ளது என்ற தகவலை அறிந்த, மகாதேவ உழவாரப்பணி சிவ தொண்டர்கள் நேற்று முன்தினம் காட்டேரி கிராமத்திற்கு வந்தனர். அவர்கள், கோவில் வளாகத்தில் மூலவர், அம்மன் பரிவார மூர்த்திகள் இருந்த இடத்தில் பல அடி ஆழம் தோண்டிய போது அங்கு சிவலிங்கம், குங்குமநாயகி அம்மன், முருகன் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மண்ணில் புதைந்திருந்த அம்மன், சிவலிங்கம், முருகன் சிலைகளை தோண்டி மேலே எடுத்தனர். பின் சிலைகளை கழுவி குங்குமம், மஞ்சள் பூசி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தகவல் அறிந்த ஊர் மக்கள், அங்கு திரண்டு ஸ்வாமியை வழிபட்டனர். முதல் கட்டமாக ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் சிலைகளை வைத்து வழிபடுவது எனவும், பிறகு, ஏற்கனவே சிவன் கோவிலில் இருந்த இடத்தில் புதியதாக குங்குமநாயகி சமேத அப்புநாதீஸ்வரர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் ஊர்மக்கள் முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar