கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சிறந்த உடல்நிலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2015 01:01
உழைப்பில் ஆர்வம் காட்டும் கும்ப ராசி அன்பர்களே!
உழைப்பும், விடா முயற்சியும் கொடுக்க வேண்டிய மாதமாக அமையும். திறமைக்கு சவால் விடும் காலம் இது. சுக்கிரனை தவிர மற்ற அனைத்தும் சாதகமற்ற நிலையில் உள்ளன. இதனால் எந்த ஒரு செயலையும் அதிக முயற்சி எடுத்தே செய்ய நேரிடும். வருமானம் ஓரளவு இருக்கும். எதிர்பாராமல் செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சுக்கிரனால் ஜன. 23 க்கு பிறகு பெண்களால் பெருமை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். புதன் ஜன. 28ல் வக்ரம் அடைவதால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். இந்த சமயத்தில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிடும். திடீர் செலவு நேரிடலாம். சிக்கனமாக இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றத்தால் செலவு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்கமான சலுகைகளுக்கு குறைவில்லை. விண்ணப்பித்த கடன் கிடைக்க தாமதமாகலாம்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு எதிர்பார்த்த படி கிடைக்காமல் போகலாம். ஜன. 23 க்கு பிறகு சிறப்பான நிலை பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது.
மாணவர்களுக்கு புதன் சாதகமற்று காணப்படுவதால், கவனமுடன் படிக்க வேண்டியிருக்கும்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும்.
பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். விருந்து, விழாஎன சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வீட்டில் சமையல் செய்யும் போது கவனமாக இருக்கவும்.