பதிவு செய்த நாள்
14
ஜன
2015
11:01
நகரி: காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், 22 நாட்களில், பக்தர்கள், 50.63 லட்சம் ரூபாயை, உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலுக்கு தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, கோவிலில் உள்ள உண்டியலில், ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு டாலர்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த, 22 நாட்களில், பக்தர்கள் அளித்த காணிக்கையை, கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாசராவ் முன்னிலையில், ஊழியர்கள் உண்டியலை திறந்து எண்ணினர். இதில், 50,63,983 ரூபாய் ரொக்கம், 12 கிராம் தங்கம், 2,300 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு டாலர்கள் இருந்தன.