Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாணவ, மாணவியர் பாத பூஜை வழிபாடு! லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2015
11:01

ஆட்டையாம்பட்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச தேர்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சேலம், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவை காண மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள், காளிப்பட்டிக்கு வந்து தேர்த்திருவிழாவை கண்டு  செல்வர். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு மயில் வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இன்றும், நாளையும் (ஃபிப்., 1ம் தேதி) ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஃபிப்., 2ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும்  நடக்கிறது, இதையடுத்து கல்யாண வைபோகமும், ஸ்வாமி திருத்தேருக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஃபிப்., 3ம் தேதி காலை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பரம்பரை அறங்காவலரும், பூசாரியுமான அம்பிகாபதி முன்னிலையில், பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து, கோவிலை சுற்றி இழுத்து வருவர். 4ம் தேதி சந்தன காப்பு அலங்காரம், திருவீதி உலா நடக்கிறது. ஃபிப்., 5ம் தேதி, இரவு மின் அலங்காரம் மற்றும் புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி சத்தாபரண மகாமேரு நிகழ்ச்சி நடைபெறும். அது சமயம் கோவில் சார்பில், சிறப்பான வாண வேடிக்கை நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதி கருதி சிறப்பு தரிசன வசதியும், அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலரும் மற்றும் பூசாரியுமான அம்பிகாபதி, செயல் அலுவலர் முத்துசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar