பதிவு செய்த நாள்
05
பிப்
2015
01:02
கோத்தகிரி : கோத்தகிரி காத்துகுளி பால தண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச தேர்திருவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவிலில், கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் காலை, 6.00 மணிக்கு, அபிஷேக ஆராதனை, காலை, 10.30 மணிமுதல், 11.00 மணிவரை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12.00 மணிக்கு, பறவை காவடி மற்றும் பன்னீர் காவடி நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4.30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், அவதரித்த முருகபெருமான், திருத்தேரில் உலா நிகழ்ச்சி நடந்தது.இதே போல, கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில், தேன்மலை முருகன் கோவில், நட்டக்கல் முருகன் கோவில் மற்றும் பர்ன்சைடு கல்யாண சுப்ரமணியர் கோவில்களில் தைப்பூச திருவிழாக்கள் நடந்தது.