புதுச்சேரி: பிருந்தாவனத்தில் அமைந்துள்ள, யாழ்பாணம் கதிர்வேல் சுவாமிகள் கோவிலில் 101வது குரு பூஜை மற்றும் தை பூச விழா நடந்தது. இதனையொட்டி சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், விசேஷ பூஜைகள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, பிருந்தாவனம் மக்கள் நற்பணி மன்ற தலைவர் டாக்டர் புருஷோத்தமன், புனிதா, ராமமூர்த்தி, உதயசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.