மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் தை பூச விழா நடந்தது. இதையொட்டி பாலமுருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பாலாம்பிகை சமேத முகிலேஷ்வ ரருக்கு கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், கலசப் பூஜை நடத்தப்பட்டன. இரவு 8 மணிக்கு பால முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அண்ணாநகர், காமராஜ்நகர், மோகன் நகர், தேவி நகர், பொருவளூர், பொரசப்பட்டு, வாழவச்சனூர் பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.