பதிவு செய்த நாள்
06
பிப்
2015
12:02
திருவள்ளூர்: திருவள்ளூர், யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகரில், யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், வியாழக்கிழமை தோறும், யோக ஞான தட்சிணா மூர்த்திக்கு, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல், நேற்று காலை 9:30 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தட்சிணாமூர்த்திக்கு அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தன. இதில், திருவள்ளூர், காக்களூர், பூங்கா நகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.