பதிவு செய்த நாள்
06
பிப்
2015
12:02
பெரம்பலுõர்: பெரம்பலுõர் மாவட்டம், குன்னம் அருகே சு. ஆடுதுறை கிராமத்தில் உள்ள அபராத ரட்சகர் (குற்றம் பொறுத்தவர்) கோயிலில் மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டியும், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டிம் சிறப்பு மகா யாகமும், பூஜையும், அன்னதானமும் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இதில் வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, யூனியன் சேர்மன் கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகுமார், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் குலோத்துங்கன், மாவட்ட ஜெ.,பேரவை பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், குன்னம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் பேரவை இணை செயலாளர் குணசீலன், கட்சி நிர்வாகிகள் இளங்கோவன், நாகராஜ், யூனியன் கவுன்சிலர் அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.