நத்தம் : நத்தம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், லெட்சுமிபூஜை, பூர்ணா குதி, தீபாராதனை நடந்தது. ஐந்து காலயாக பூஜைகளும் நடந்தன. புண்ணியஸ்தலங்களான ராமேஸ்வரம், காசி, கொடுமுடி, சுருளி, அழகர்கோ யில் நூபுர கங்கை, கரந் தன்மலை கன்னிமார் கோயில் ஆகிய தீர்த்தக்குடங்கள் நகர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் காலை 9 முதல்10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்களில் புண்ணிய தீர்த்தால் குருக்கள்கள் சுந்தரேசன், முத்துமணி அபிஷேகம் செய்தனர். பின் ஆராதனை, அர்ச்சனையும் நடத்தப்பட்டன. இதில் கலெக்டர் ஹரிகரன், அறநிலையத்துறை இணைகமிஷனர் நடராஜன் மற்றும் ரமேஷ் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதா னம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஞானசேகர் உட்பட பலர் செய்திருந்தனர்.