திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு மூலவர் மங்களாம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு உற்சவர் அம்மனை கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வரச்செய்து ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர். ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், திருஅருட்டுறைநாதன் அருட்சபையினர் செய்திருந்தனர்.