பதிவு செய்த நாள்
07
பிப்
2015
12:02
திருத்தணி:முருகன் கோவிலில், தைக்கிருத்திகை மற்றும் தைப்பூசம் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள், 61 லட்சம் ரூபாய், 432 கிராம் தங்கத்தை காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில், கடந்த மாதம், 28ம் தேதி தைக்கிருத்திகை விழாவும், கடந்த, 3ம் தேதி தைப்பூச திருவிழாவும் நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவர் முருகப்பெருமானை தரிசித்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி மற்றும் அறநிலைய ஆட்சித்துறை (வேலூர்) உதவி ஆணையர் தனபால் ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. இதில், 61,10,290 ரூபாய் ரொக்கம், 432 கிராம் தங்கம் மற்றும், 4,850 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்துள்ளது.