பதிவு செய்த நாள்
07
பிப்
2015
01:02
முசிறி: முசிறியில் உள்ள தென் கள்ளர் மாரியம்மன் கோவிலில், உலக அமைதிக்காக, சொக்கநாதர், மீனாட்சி அம்பிகை திருக்கல்யாண உற்சவம் வரும், 10ம் தேதி நடக்கிறது.
முசிறியில் உள்ளது கள்ளர் தெரு மாரியம்மன் கோவிலில், உலக மக்கள் அமைதியான முறையில் வாழவும், மழை வேண்டியும், சொக்கநாதர் மீனாட்சி திருக்கல்யாணம் வரும், 10ம் தேதி நடக்க உள்ளது. தொடர்ந்து, ஸ்வாமிகளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளும் நடக்க உள்ளது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் தலைமையில், மீனாட்சி அம்மனுடன் திரு வீதி உலா வர உள்ளார். விழா ஏற்பாடுகளை, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண குழுவினர், தென், வட, புது கள்ளர் தெரு மக்கள் செய்து வருகின்றனர்.