கடலூர் அடுத்த பி.வடுகப்பாளையத்தில்உள்ள கண்ணனூர் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடலூர் அடுத்த பி.வடுகப்பாளையத்தில் அமைந்துள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில்கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்கான விழா நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி முதல் கால யாக சாலைபூஜை நடைபெற்றது.
நேற்று காலை 6:00 மணிக்குஇரண்டாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.