பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
புதுச்சேரி: கம்பன் நகர், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
ரெட்டியார்பாளையம், கம்பன் நகரில் உள்ள, கற்பக விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 5ம் தேதி காலை 8.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. 6ம் தேதி, காலை 8.30 மணிக்கு, லட்சுமி ஹோமம், தன பூஜை, நவக்கிரக ஹோமம், மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது.
நேற்று முன் தினம் 7ம் தேதி காலை 8.30 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை முடிந்து, காலை 9.45க்கு விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.00 மணிக்கு மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் மீது, புனித ஊர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.