செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, லலிதா செல்வாம்பிகை கவசம், லலிதா செல்வாம்பிகை 1008 மந்திரங்கள் வாசித்தனர். மகா தீபாராதனை, ஜோதி தரிசனம் நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.