பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
ப.வேலூர் : ஆலமரத்து கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.
ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் முகப்பு வாயில் மற்றும் ஆலமரத்து கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரி ஆற்றுக்குச் சென்று பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்தனர்.அன்று மாலை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்து பூஜை, யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, கருப்பண்ணசாமி கோவில் முகப்பு வாயில் மற்றும் ஆலமரத்து கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாண்டமங்கலம் மலையாள கருப்பண்ணசாமி, விநாயகர், மல்லாண்டவர், கன்னிமார் ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு நாடி சந்தானம், மூலமந்திர ஹோமம், கடம் யாகசாலையில் இருந்து புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் குடிபாட்டு மக்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.