பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்பள்ளி, திம்மராய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, வெண்ணம்பள்ளி, நாகல்பாறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள போலுமலை திம்மராய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம், வாஸ்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோபுர கலச ஸ்தாபனமும், மஹா விஷ்ணு ஹோமமும் நடந்தது. நேற்று, காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை மஹா விஷ்ணு ஹோமமும், கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதுல், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை நடை பெற உள்ளது. இதில், வெண்ணம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான, பக்தர்கள் கலந்து கொண்டனர்.