Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை திறந்தது 5 நாட்கள் ... சந்திரபிரபை வாகனத்தில் பள்ளிகொண்டீஸ்வரர் வீதி உலா! சந்திரபிரபை வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாண கடலில்பரிகார பூஜைக்கு கட்டணம் நிர்ணயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 பிப்
2015
11:02

தேவிபட்டினம்:ராமநாதபுரம் தேவிபட்டினம் நவபாஷாண கடலில் நடத்தப்படும் பரிகார பூஜைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடலுக்குள் நவபாஷாணம் எனும் நவக்கிரகங்கள்அமைந்துள்ளதாலும், ராமபிரானால் பூஜிக்கப்பட்ட இடம் என்பதாலும் தேவிபட்டினம் சிறப்புபெற்று விளங்குகிறது.

இங்கு முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன்கழிக்க, தர்ப்பணம் ஆகியவைகளுக்கு
சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும் நவக்கிரக தோஷங்கள், திருமணத்தடை
விலகவும், குழந்தை பாக்கியம், ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இதற்காக தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அவர்களிடம் புரோக்கர்கள் பரிகார பூஜைகளுக்கு ஏற்ப 2000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அடாவடி வசூல் செய்து வந்தனர். இதனால் பக்தர்கள் கடும்
அதிருப்தியடைந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக கலெக்டர் நந்தகுமாரின் உத்தரவுப்படி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பக்தர்கள் இந்திரஜித், ராஜேஷ் பிரபு கூறுகையில்,பரிகார பூஜைகளுக்கு புரோக்கர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கும் நிலை இருந்தது. தற்போது வைக்கப்பட்டுள்ள கட்டண விபரபட்டியலால் ஒவ்வொரு பூஜைக்கும் எவ்வளவு கட்டணம் என அறிய முடிகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் பரிகார பூஜைகள் செய்யும் உண்மையான அர்ச்சகர்கள் யார் என பக்தர்களுக்கு
தெரிவதில்லை. அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு உடை வழங்க வேண்டும்,” என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar