திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2015 11:02
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (18ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள், தாயார், சயனநரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலவர் பெருமாள் மன்னார்குடி ராஜகோபாலன் அலங்காரத்திலும், காலை 9:00 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 5:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8:30 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடந்தது.