ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்கள் 4 வாரங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணப்பட்டது. ஸ்ரீபர்வத வர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.71லட்சத்து 47 ஆயிரத்து 113 ரொக்கம், 85 கிராம் தங்கம் , 5கிலோ 950 கிராம்வெள்ளி நகைகள் கிடைத்தன. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், கட்டுமானப்பணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர்கள் ககாரின் ராஜ், ராஜாங்கம், பேஷ்கர்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன் பங்கேற்றனர்.