திருவாரூர்: நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் உண்டியல் திறந்து எண்ணியதில் 14 லட்சத்து 33 ஆயிரம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோ யில் (நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும்) இக்கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தஞ்சாவூர் அறநிலைய உதவி ஆணையர் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலர் குமரேசன்,கோயில் தக் கார் மற்றும் திருவாரூர் அறநிலைய உதவி ஆணையர் சிவராம்குமார், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர் சாத்தையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இப்பணியில் ஐயப்ப சேவாசங்கத்தினர்,சி்ட்டியூனியன் வங்கி அலுலவ ர்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கையாக 14லட்சத்து 33 ஆயிரத்து 60 ரூபாய் பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.