பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசிதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. மாரியம்மன்கோயில் மாசிதிருவிழாவில் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் அதில் புனித நீர், பால் ஊற்றி வழிபடுகின்றனர். பூவோடுவைத்து (தீச்சட்டி எடுத்து) பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருக்கல்யாணம்: மங்கள வாத்தியங்கள் முழங்க, புனித கலசங்கள் வைத்து நேற்றிரவு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை 4.30 மணிக்குமேல் தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையும், அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.