திருக்கனுார்:குமாரப்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் சார்பில், சங்கராபரணி கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. குமாரப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக, மதியம், காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. குமாரப்பாளையம் இந்து முன்னணி கிளை சார்பில் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது.