கடலூர்: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள உப்பனாற்றில் மாசி மக தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதனையொட்டி சி ங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், அக்கரைகோரி கண்ணனுõர் மாரியம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை மாரியம்மன், சலங்குகார கிராமம் நாக முத்தாலம்மன் சுவாமிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் எழுந்தருளி தெப்பல் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப்போன்று, சொத்திக்குப்பம் பரவனாற்றிலும் தெப்பல் உற்சவம் நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.