மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வீட்டில் குதூகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2015 02:03
பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே!
கேது, சனி, குரு,சூரியன், சுக்கிரன் ஆகியோரால் நற்பலன் உண்டாகும். செவ்வாய் மார்ச் 21 வரையும், புதன் ஏப். 6 க்குப் பிறகும் நன்மை அளிப்பர். பொன், பொருள் சேரும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதாரம் சிறக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உறவினர்ஆதரவு நல்லமுறையில் இருக்கும். ஏப். 7க்கு பிறகு நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். செவ்வாயின் அருளால் திருத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டும். உடல்நலம் சிறக்கும்.
தொழில், வியாபாரத்தில் மாத முற்பகுதியை விட, பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். மார்ச் 21க்கு பிறகு எதிரி பிரச்னை குறுக்கிட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள். மார்ச் 27,28 தேதிகளில் அதிர்ஷ்டவசமாக பணவரவு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஏற்படும்.
பணியாளர்களுக்கு, புதன் சாதகமற்று இருப்பதால் மாத தொடக்கத்தில் பணிச்சுமை ஏற்படும். இருப்பினும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஏப். 6,7 தேதிகளில் இனிய அனுபவம் காத்திருக்கிறது. ஏப். 6க்கு பிறகு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் காண்பர். அரசியல்வாதிகள் சிறப்பான நிலை பெறுவர். விரும்பிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி அடைவர். போட்டியில் வெற்றி உண்டாகும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் சீரான மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் முன்னேற்றம் காண்பர். மார்ச் 20,21ல் ஆடை,அணிகலன் வாங்கலாம். சந்தோஷ அனுபவம் உண்டாகும்.
நல்ல நாள்: மார்ச் 16, 17, 20, 21, 27, 28, 29, 30, 31 ஏப். 6, 7, 8, 9, 12, 13
கவன நாள்: ஏப். 1, 2 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 7, 9 நிறம்: செந்துõரம்,மஞ்சள்,
வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மாரியம்மனை வழிபடுங்கள். புதனன்று குலதெய்வத்தை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »