Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாளையத்து மாரியம்மன் கோவிலில் ... ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை! ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா நிறைவு

பதிவு செய்த நாள்

14 மார்
2015
11:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. வரும் 16ம் தேதி மகா அபிேஷகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது. கடந்த மாதம் 24ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும்; பிப்.,3ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், 6ம் தேதி முதல் வெளிபூவோடு துவக்க நிகழ்ச்சியும் நடந்தன. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள்; பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி, கடந்த 11ம் தேதி இரவு, 8:45 மணிக்கு துவங்கியது. முதல் நாளில், கோவிலிலிருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியிலும்; இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் தேர்நிலை நிறுத்தப்பட்டது.

நிறுத்தப்பட்டிருந்த தேரின் சக்கரத்தில், உப்பு, மிளகு கொட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இறுதி நாளான நேற்று, சத்திரம் வீதியிலிருந்து இரவு, 8:00 மணிக்கு மேல் புறப்பட்டு, தெப்பக்குளம் வீதி வழியாக தேர்நிலைக்கு வந்தடைந்தது. இதையொட்டி, சத்திரம்வீதி, தெப்பக்குளம் வீதி வழித்தடத்தில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தேர் நிலைக்கு வந்ததையடுத்து, பரிவேட்டை நிகழ்ச்சியும்; கோவில் வளாகத்திலேயே சம்பிரதாயதுக்காக, தெப்பத்தேர் வைபவமும் நடந்தது. தொடர்ந்து, இன்று அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல்; 16ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar