Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனகை மாரியம்மன் கோயிலில் ... அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை! அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டையில் சேங்கை வெட்டு விழா : மழைவேண்டி நேர்த்தி!
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டையில்  சேங்கை வெட்டு விழா : மழைவேண்டி நேர்த்தி!

பதிவு செய்த நாள்

25 மார்
2015
11:03

சிவகங்கை: பங்குனி விழாவை முன்னிட்டு நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி  அம்மன் கோயில் ஊரணியில், ஐதீக முறைப்படி ‘சேங்கை வெட்டு’ எனும் மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை, நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா முன்னோட்டமாக காமராஜர் தெரு கண்ணாத்தாள் கோயிலில் பங்குனி விழா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக பெண்கள் மதுக்குடம் எடுத்து ஊர்வலமாக கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலுக்கு வந்து மதுக்குடத்தை அம்மன் சன்னதி முன் இறக்கி வைப்பர். பின்னர் ஏராளமான இளைஞர்கள் ‘சேங்கை வெட்டு’ எனும் ஐதீக முறைப்படி கோயில் ஊரணி குளத்தில் மண் எடுத்தனர். ஊரணியில் எடுத்த மண்ணை பெண்கள் சேலை முந்தானையில் வாங்கி கரையில் கொட்டினர். பின்னர் கோயிலில் தீர்த்தம் பெற்று மதுக்குடத்தை எடுத்துச் சென்ற பெண்கள் கோயில் முன் உள்ள இலுப்பமரத்தில் ஊற்றினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். முதல்கரை பூசாரி முனியாண்டி கூறுகையில்,“வைகாசியில் நடக்கும் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா சுபிட்சமாக நடக்கவும், நல்ல மழை செய்து கோயில் ஊரணி நிறைந்து பக்தர்கள் அம்மனை வேண்டி செல்ல மண் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதுதவிர உலக அமைதி, குடும்பம் சுபிட்சம் பெற வேண்டியும் கோயில் ஊரணியில் ‘சேங்கை வெட்டு’நிகழ்ச்சி ஆண்டாண்டு காலமாக நடக்கிறது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar