சிங்கம்புணரி : சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுடன் துவங்கியது. பெண்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபட்டனர். அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 31ல் பால்குடம், முளைப்பாரி எடுத்தல், ஏப்ரல்1ல்பொங்கல் வைத்தல், ஏப்ரல் 2ல் கரகம், அக்கினிச்சட்டி, அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.