சாத்தனூரரில் ஒரே நாளில் ஐந்து கோயில்களில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2015 11:03
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே சாத்தனூர் கிராமத்தில் ஒரே நாளில் ஐந்து கோயில்களில் மகாகும்பா பிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே சாத்தனுார் கிராமத்தில் செல் லியம்மன், வெள்ளிவினாயகர், அய்யனார்,மாரியம்மன்,வீரனார் ஆகிய ஐந்து கோயில்களின் மகாகும்பாபிஷேகம் அதிவிமரிசை யாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 23ம் தேதி தொடங்கியது.25 ம் தேதி புதன்கிழமை காலை 4வது காலபூஜைகள் நடந்தது .தொடர்ந்து ஐந்து கோயில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனர்.விழா ஏற்பாடுகளை சாத்தனூர் கிராம வாசிகள் மற்றும் உபயதரர்கள் செய்திருந்தனர்.