பதிவு செய்த நாள்
31
மார்
2015
12:03
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த வம்பனில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் பங்குனித் திருவிழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. பூச்சொரிதலை முன்னிட்டு கோவில் முன்புறத்திலும், வம்பன் நால்ரோடு, வீரடிப்பட்டி, மாஞ்சன்விடுதி, மழவராயன்பட்டி, பாப்பான்பட்டி, கொத்தக்கோட்டை ஆகிய, ஏழு இடங்களில் போட்டி கரகாட்டமும் குறவன்குறத்தி ஆட்டமும் நடத்தப்பட்டது. நள்ளிரவில் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் பூ தட்டுகளிலும் பூக்களை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். நிகழ்ச்சி ஏற்படுகளை கோவில் நிர்வாகமும் வம்பன் நால்ரோடு, வீரடிப்பட்டி, மாஞ்சன்விடுதி, மழவராயன்பட்டி, பாப்பான்பட்டி, கொத்தக்கோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இளைஞர்களும் செய்தனர். வம்பன் நால்ரோடு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், மிகப் பிரமாண்டமான வாகனத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு ரதத்தில் பூ எடுத்துச் சென்றனர்.