Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சேந்தநாடு திரவுபதி அம்மன்கோவிலில் ... நெல்லி குளங்கரை பகவதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
02:04

பொள்ளாச்சி: சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை, 8:30 மணிக்கு மகாதீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய பெருமான், வள்ளி ஸ்ரீ தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். பின், இரவு, 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சித்திரத்தேரில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

வால்பாறை: வால்பாறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலின், 63ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா, கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று மாலை, 4:00 மணிக்கு முருகன் நற்பணி மன்றத்தலைவர் மதனகோபால் தலைமையில் திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின் பல்வேறு அபி?ஷக பூஜைகள் செய்யப்பட்டன. மாலை, 5:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில், வால்பாறை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. இன்று, காலை, 8:00 மணிக்கு அண்ணாநகர் சின்னையன் குழுவினர் முருக பக்தர்கள் மற்றும் அண்ணாநகர் இளைஞர் குழுவினரின் சார்பில் நல்லகாத்து ஆற்றிலிருந்து, கோவிலுக்கு பக்தர்கள் சுத்துக்காவடி, அங்கு அலகு காவடி மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர். தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar